உலக செய்திகள்
சிரியா கலவரத்தில் ஒரே நாளில் 180 பேர் ப‌லி
தேதி : ஆகஸ்ட் 18, 2012 11:00:51

சிரியா‌வி‌ல் ராணுவத்தினருக்கும், ‌கிள‌ர்‌ச்‌சியாள‌ர்களு‌க்கும் இடையே நட‌ந்த ச‌ண்டை‌யி‌ல் ஒரே நா‌ளி‌ல் பொது மக்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

மேற்கு ஆசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக நீடிக்கும் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ஆதரவை பெற்றுள்ள அரசு எதிர்ப்புப் படையினரின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இப்போது தலைநகர் டமாஸ்கஸில் புகுந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் டமாஸ்கஸில் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்ட கடும் சண்டை பெரிதாக வெடித்துள்ளது. நே‌ற்றைய தொழுகைக்குப்பின் ஏற்பட்ட மோதலில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் அடங்குவர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போரிட்டு வரும் எதிர்ப்புப் படையினர் விரைவில் ஒன்று திரண்டு, ஒட்டுமொத்தமாக டமாஸ்கஸை தாக்க இருக்கின்றனர். எனவே இன்னும் சில தினங்களில் சிரியாவில் அஸாத்தின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 மாதங்களாக நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதியான வழியில் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து அமெரிக்காதான் அங்கு வன்முறையைத் தூண்டி வருகிறது என்று ர‌ஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் அமைதி முயற்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ர‌ஷ்யா மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ...
பாகிஸ்தானில் பணிப்பெண் ஒருவரை ஆளும் கட்சி எம்.பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (என்) பெண் எம்.பி. நிகாத் ஷேக். இவர் தனது ...
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் 15.8 மீற்றர் உயரமும், சிங்கப்பூரில் 17.2 மீற்றர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் ...
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது இலங்கையைப் புறக்கணிகக் கோரி ...
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் இலங்கைத் ...
லண்டன்: "அம்மாவின் சமையல் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே...' என்ற ஏக்கத்தில் இருந்த, பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான ஷெலினா துனா, தன்னைப் போல், வீட்டு சாப்பாட்டை விரும்பும், லண்டனில் ...
டோக்கியோ: ஜப்பானின் அணுஉலைத் தொழில் நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு வழங்க 60 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அணு உலைத் தொழில்நுட்பம், தொழில் நுட்பத் ...
ஜகார்த்தா: எரிவாயு விலைகளை 33 விழுக்­­­காடு வரை உயர்த்த இந்­­­தோ­­­னீ­­­சிய நாடா­­­ளு­­­மன்றம் நேற்று விவா­­­தித்­­­தது. நாட்டின் பொரு­­­ளி­­­ய­­­லுக்கு அதிகச் சுமையாக இருக்­­­கும் எரிவாயு ...
இலங்கையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை தாம் விரும்பவில்லை ...
தந்தையர் தினமான இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது தந்தையை நினைவுக்கூர்ந்தார். தந்தையாக பொறுப்பு வகிப்பது முக்கியமான கடமைகளில் ஒன்று என அவர் கூறினார். இன்றைய தொழில்நுட்ப உலகில் ...
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போர்ச்சுகலில் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி நடத்தினர். அரசின் ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்
தற்போதைய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
சினிமா செய்திகள்